எச்சரிக்கை! பகலில் கடித்த கொசுவால் மருத்துவர் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று

2 Min Read

மும்பை, ஜூன் 27 மகாராட்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும்அவரது மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.

உகாண்டாவில் கடந்த 1947 இல்…
ஜிகா வைரஸ் நோய் என்பது ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். மனிதர்களை பகலில் கடிக்கும் இந்த வகை கொசு டெங்கு, சிக்குன்குனியா, போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை கொண்டவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிகாவைரஸ் முதன்முதலில் உகாண்டாவில் கடந்த 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராட்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து புனே மாநகராட்சிசுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது,
“மருத்துவருக்கு அண்மையில் காய்ச்சல், தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்பட்ட தால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.அவரது ரத்த மாதிரியை ஆய்வுக்காக தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு மருத்துவமனை அனுப்பியது. இதில் அந்த மருத்துவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் மருத்துவரின் 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மாநகராட்சி ஆய்வு
புனே நகரில் 2 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்புப் பணி தொடங்கியது. இதில் மருத்துவர் வசித்த பகுதியில் வேறு எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை. என்றாலும் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

விழிப்புணர்வு
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது “இந்த வைரஸ் பாதிப்புகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பிட்ட பகுதி கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.ஜிகா வைரஸ் பொதுவாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கர்ப்பிணிக்குத் இத்தொற்று ஏற்பட்டால், வயிற்றில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்” என்றார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *