கடவுள் சக்தி இதுதான்! கோவிலில் மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றச் சென்ற மாணவன் பலியான பரிதாபம்!

viduthalai
1 Min Read

தஞ்சாவூர்,ஜூன் 27– தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெ ருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி செந்தில்குமாரி. இவர்களு டைய ஒரே மகன் வீர மணி(வயது17). இவர் நாட்டுச்சாலை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தார்.

25.6.2024 அன்று அவர் கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அந்த கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கான பணிகளில் அரியலூரை சேர்ந்த வீரமுத்து மகன் தினேஷ்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் கோவிலை சுத்தம் செய்வ தற்காக எந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர் மீது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பட்டதில் தினேஷ்குமார் மீது மின் சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டார்.

அவரை காப்பாற்ற முயன்ற வீரமணி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் தூக்கி வீசப் பட்டார். அக்கம், பக்கத் தில் இருந்தவர்கள் இருவ ரையும் மீட்டு மருத்துவ அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *