உலகில் முதல் முறை சிறுவன் மூளையில் பொருத்தப்பட்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி!

2 Min Read

உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு, வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் கருவி, அவரது மூளையில் பொருத்தப் பட்டுள்ளது.

ஓரன் நால்சன் என்ற சிறுவனுக்கு வலிப்பு நோயின் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், ஒரு நாளில் நூற்றுக் கணக்கான முறை வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுவந்தார். அவரது மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுக் கருவி, மூளைக்கு எலக்ட்ரிக்கல் சமிக்ஞைகளைக் கொடுத்து ஒரு நாளில் ஏற்படும் வலிப்பு எண்ணிக்கையை 80 சதவீதம் குறைத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுவனின் மூளையில் இந்தக் கட்டுப் பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட பிறகு அவன் இயல்பாக இருப்பதாகவும், முன்பை விட சுட்டியாக மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாய் தெரி வித்துள்ளார். குதிரை ஏற்றம், விளை யாட்டு என அவனது வாழ்க்கை மாறி யிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அறிவியல்

ஓரன், சேமர்செட் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன். லண்டன் கல்லூரி பல்கலை, கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. ஆகியவற்றின் கூட்டணியில் கடந்த அக்டோபரில் அந்த சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுவனுக்கு 3 வயதிலிருந்தே வலிப்பு நோய் இருந்துள்ளது. இது அவன் வளர வளர தீவிரமடைந்துள்ளது.

இந்த அறுவைசிகிச்சைக்கு முன், சிறுவனுக்கு ஒரு நாள் கூட வலிப்பு ஏற்படாமல் இருந்ததில்லை என்றும் ஒரு சில நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வலிப்பு ஏற்படும் என்றும் சில வேளைகளில் அவன் நினைவிழந்து மூச்சு விடுவது நின்றும் கூட போயிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவன் தீவிர வலிப்பினால் எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தழுவலாம் என்ற நிலையில், குடும்பத்தினரால் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருந்த நிலையில்தான் இந்த அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3.5 செ.மீ. சதுரத்தில் 0.6 செ.மீ. தடிமன் கொண்ட கட்டுப்பாட்டுக் கருவி, ஓரனின் மண்டை ஓடு அதற்கேற்ப வெட்டி எடுக்கப்பட்டு அதற்குள் வைத்து மண்டை ஓட்டுடன் ஸ்குரூ போட்டு இணைக்கப்பட்டுள்ளது. தலையில் மாட்டும் ஹெட்போன் போன்ற கருவி மூலம், இந்த கட்டுப்பாட்டுக் கருவிக்கு சார்ஜ் போடப்படுகிறது.

அறுவை சிகிச்சையிலிருந்து சிறுவன் உடல்நலம் தேறிய பிறகே, இந்த கருவி இயக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி மூலம், சிறுவனின் மூளைக்கு மிக லேசான எலக்ட்ரிக்கல் தூண்டுதல் கொடுக் கப்பட்டுக் கொண்டிருக்கும், இதனால், வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால், சிறுவன் தற்போது நல்ல உடல்நலத்துடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *