பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை

1 Min Read

கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை தன்வசம் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு நடந்த மய்யங்களில் நேற்று (26.6.2024) அவர்கள் சோதனை நடத்தினர். குறிப்பாக பஞ்ச்மகால் மாவட்டத்தின் கோத்ரா மற்றும் கேதா மாவட்டத்தின் வனக்போரியில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் அவர்கள் சோதனை நடத்தினர். இந்த பள்ளிகள் நீட் தேர்வு மய்யங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிகளில் தேர்வு நடந்த வகுப்பறைகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். கோத்ராவில் நீட் தேர்வு எழுதிய 27 மாணவர்களுக்கு உதவ முயற்சித்ததாகவும், இதற்காக ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் 3 பேர் மீது காவல்துறையினர் கடந்த மே 8ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *