சென்னை, ஜூன் 26- மாணவர்களிடையே அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஆர்வத்தை ஏற்ப டுத்த விஞ்ஞானிகளின் பெயரில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது.
கொள்கை விளக்கக் குறிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 24.6.2024 அன்று உயர் கல்வித்துறை மானிய கோரிக்கைமீது சுட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடை பெற்றது. அப்போது அந்த துறை யின் அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவையில் வைத்த உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் கூறப் பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
புதுமைப்பெண் திட்ட மூலம், 2023-2024ஆம் கல்வியாண்டில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளை சார்ந்த 4,039 மாணவிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளை சார்ந்த 12,135 மாணவிகளும் பயன டைந்துள்ளனர்.
மாணவர்களிடையே அறி வியல் கண்டுபிடிப்புகளில் ஆர் வத்தை ஏற்படுத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டு, இளங்கலை பொறியியல் படிப்பை முடித்து முதுகலை பொறியியல் படிப்பை தொடரும் 10 மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், விடுதி கட்ட ணம் போன்ற அனைத்து கட்ட ணங்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணத்தையும் உதவித் தொகையாக, சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெயரில் தமிழ்நாடு அரசு வழங்க தீர்மானித்துள்ளது. இந்த உதவித்தொகைக்காக ரூ.10கோடியில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உதவி பேராசிரியர் பணியிடங்கள்
2024-2025ஆம் கல்வியாண்டுக் கான மாணவர்கள் சேர்க்கைக்காக இணைய வழியாக மொத்தம் 2.11 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் உள்ள அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில், மின்சார நடமாடும் வாகனங்கள் மய்யம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2019-2020ஆம் ஆண்டு வரை உள்ள காலிப்பணியிடங்க ளின் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி யிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துத் தேர்வை ஆகஸ்டு மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர், செஞ்சி, சிறீபெரும்புதூர், திருமயம்,தளி உள்ளிட்ட 13 பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடம் கட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர், ஏரியூர், அரவக் குறிச்சி, அந்தியூர் உள்ளிட்ட 4 பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.