சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூபாய் 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

1 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 26 – சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. 

இந்த நிலம் கடந்த 1910இ-ல் தோட்டக்கலை சங்கத்துக்கு வழங் கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்கு மாறியது.

கடந்த 1989ஆ-ம் ஆண்டு அப் போதைய முதலமைச்சர் கலைஞர், 17 ஏக்கர் நிலத்தை மீட்டார். இதை யடுத்து, அப்பகுதியில் செம் மொழிப் பூங்கா கடந்த 2009இ-ல் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள நிலம் தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி என்பவரிடம் இருந்தது. 

இந்நிலையில், திமுக ஆட்சி ஏற்பட்ட பின்னர், மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது. 

இந்நிலையில், கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில், ரூ.25 கோடியில் கலை ஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைக் கப்படும் என கடந்த ஆக.15ஆ-ம் தேதி சுதந்திர நாள் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த பூங்காவுக் கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. செப்.18ஆ-ம் தேதி ஒப்பந்தத்துக்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *