நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம் – தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை என்று செய்தி வெளி வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மோசடிகளும், ஆள் மாறாட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அடிப்படையில் நீட் தேர்வு என்பது திறமைக்கான சரியான அளவுகோல் அல்ல – இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றபொழுது சிபிஎஸ்இ மூலம் கேள்விகள் தயாரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்துவது எந்த வகையில் சரியானது? இந்நிலையில் நீட் தேர்வை அறவே ஒழிப்பது தான் சரியான தீர்வாக இருக்க முடியுமே தவிர, நிழலோடு சண்டை போடுவது சரியானதும் ஒழுங்கானதும் அல்ல என்பது கண் கூடு!