கிருட்டினகிரிக்கு – ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன்

1 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

நீதிக்கட்சி வளர்ந்த 

மாங்கனித் தோட்டமாம்

கிருட்டினகிரியில்

மானங்காத்த நம் தலைவர்

பெரியாருக்கோர் மாளிகை

பெருமையோ பெருமை!

ஜாதிக் கோட்டான்கள் அலறட்டும்!

மதவெறி யானைகள் பிளீறட்டும்!!

கருஞ்சட்டைச் சேனையுண்டு

கையிலே அங்குசமும் உண்டு

சனாதனத்தின் சல்லி வேரை 

சல்லடையாக்கும் திண்மையுண்டு

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்

அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணி

அடையாளங்களோடு

அண்ணாந்து பார்க்கும் மாளிகை

எழிலார்ந்த தேன்கூடு

இளைஞர்தம் பாடி வீடு!

நூலகமும் படிப்பகமும் – அறிவுத்

தாலாட்டுப் பாடிடும்

அன்னையார் பெயர் அரங்கமோ

அறிவு விருந்தை படைத்திடும்

ஆமாம் – கிருட்டினகிரிக்கோ

அறிவின் கிரீடம்!

அதன் திறப்பு விழா

ஆகஸ்டு 28 காலையில்

கடல்காணா நகரம்

கருஞ்சட்டைக் கடலைக்

காணட்டும் வாரீர்! வாரீர்!!

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *