புதுடில்லி, ஜூன் 23– அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவின்பேரில் டில்லி ஊயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித் தது.
பிணை
டில்லி அரசின் மதுபான கொள் கையில் முறைகேடு நடந்ததாக தொட ரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 21ஆம் தேதி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் ஏப்ரல் 1ஆம் தேதி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை அளித்தது. மீண்டும் அவர் சிறை சென்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோரி டில்லி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசா ரித்த நீதிமன்றம், 20.6.2024 அன்று பிணை அளித்தது.
அமலாக்கத்துறை வாதம்
இந்நிலையில், உத்தரவு நகல் கிடைத்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவதற்குள், நேற்று (21.6.2024) காலை டில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் சுதிர்குமார் ஜெயின், ரவீந்தர் துடேஜா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு அம்மனு விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்எஸ்.வி.ராஜு ஆஜரானார் அவர் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி, 20ஆம் தேதி இரவு 8 மணி யளவில் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்னும் அந்த உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பிணை உத்தரவு பிழையானது.
நேரம் அளிக்கவில்லை
மேல் நீதிமன்றங்களை அணுக அந்த உத்தரவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு அமலாக்கத்துறை வழக்குரைஞர்கள் கேட்டனர். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை.
வாதிடுவதற்கு எனக்கு போதிய நேரம் கொடுக்க வில்லை. நான் நல்ல வாதங்களை தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் அரை மணி நேரத்தில் முடிக்குமாறு நீதிபதி வற்புறுத்தினார். எழுத்துமூலம் வாதங்களை வைப்பதற்கு இரண்டு, மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். அதையும் அளிக்கவில்லை.
எனவே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
– இவ்வாறு அவர் வாதிட்டார்.
இடைக்கால தடை
அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் சிங்வி, விக்ரம் சவுத்ரி ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட நடைமுறைகளை உரிய முறையில் ஆய்வு செய்துதான் பிணை அளிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அது வரை பிணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
நாங்கள் ஒட்டுமொத்த ஆவணங் களையும் ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்கிறோம்.
அமலாக்கத்துறை மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை பிணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
– இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த உத்தரவு, ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. சுமார் 2 மாத சிறைவாசத்துக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் வருகையை கொண்டாட காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.