பன்னாட்டு அளவில் நான்கில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

Viduthalai
1 Min Read

நியூயார்க், ஜூன்22- அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக் காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன. இந்நிலையில், குழந்தை உணவு வறுமையால் தெற்காசிய நாடுகள் மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்க பிராந்தியங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பன்னாட்டு அளவில் 18 கோடியே 10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போதாமை யால் அவர்களது உயரம், உடல் உள்ளிட்ட ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக் கப்பட்டுள்ளது. இந்த 18. 1 கோடிபாதிக்கப்பட்ட குழந்தைகளில் 65 சதவீதத்தினர் இந்தியா, கினியா, ஆப்கானிஸ்தான், புர்க்கினா பாசோ, எத்தி யோப்பியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் மட்டும் 6 கோடியே 40 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவு இன்றி வாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பட்டியலில் சோமாலியா நாடு முதலிடத்தில் உள் ளது. கரோனா பெருந் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார சிக்கல்களில் இருந்து ஓரளவு மீண்டாலும் உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்து வித மான பொருட்களின் விலைவாசியும் அதிகரித்திருப்பதே அவல நிலைக்கான காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *