அரசியல் உள்நோக்கத்துடன் பாடப் புத்தகங்கள்: என்சிஇஆர்டி மீது வழக்கு தொடர முடிவு!

2 Min Read

பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரிக்கை

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
என்சிஇஆர்டி கல்வி முறையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசியல் பாடப்பிரிவுக்கான பாடப்புத்தக ஆலோசனைக் குழுவில் ஆலோ சகர்களாக இருந்த சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இரு ஆசிரியர்களும் என்சிஇஆர்டி மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
என்சிஇஆர்டியின் 12ஆம் வகுப்பு அரசியல் பாடப்புத்த கத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பான தரவில், தங்களி டம் கலந்தாலோசிக்காமல் மாற்றங்களைச் செய்துவிட்டு, அந்த புத்தகங்களில் தங்களது பெயரை அனுமதியின்றி அச்சிட்டு விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, சுஹாஸ் பல்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகிய இரு ஆசிரியர்களும் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு 17.6.2024 அன்று எழுதியுள்ள கடிதத்தில், மேற்கண்ட பொறுப்புகளிலிருந்து விலகி ஓராண்டு காலம் கடந்து விட்ட நிலையில், தங்கள் பெயர்களை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இருப்பினும் புத்தகங்களின் புதுப்பதிவில் அவர்கள் இருவரது பெயர்களை கவுன்சில் மீண்டும் அச்சிட்டுள்ளதாகவும், அதில் அவர்கள் இருவரும் அரசியல் பாடப்பிரிவு ஆலோச கர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

பாடப்புத்தகங்களில் அயோத்தி விவகாரம் தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் பாபர் மசூதி எனக் குறிப்பிடாமல், அந்த பெயர் இடம்பெறாமல் ’மூன்று கூம்புகளைக்’ கொண்ட கட்டடம் என சித்தரிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சை யாகியுள்ளது.
மேலும் கடந்த பதிப்புகளில் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்த பாபர் மசூதி குறித்த வரலாற்று தகவல்களும், இந்த புதிய பதிப்புகளில் இடம்பெறவில்லை, தவிர்க்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரம், பாஜக ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதும் இடம்பெறவில்லை.

தங்களிடம் கலந்தாலோசிக்கா மல் பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்ய எந்த தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் என்சிஇஆர்டி கவுன்சிலுக்கு இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் பெயரை பயன்படுத்தி அதன்பின்னால் என்சிஇஆர்டி கவுன்சில் ஒளிந்துகொண்டு செயல்படுவதாகவும் தெரிவித் துள்ளனர்.
விற்பனைக்கு வந்துள்ள இந்த புத்தகங்களை திரும்பப்பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், இல்லையென்றால் என்சிஇஆர்டி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *