நீதிபதி எஸ். மணிக்குமார் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம்

1 Min Read

சென்னை, ஜூன் 21- சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த நீதிபதி பாஸ்கரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

இதனால் தலைவர் பதவியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி எஸ்.மணிக்குமாரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி எஸ்.மணிக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். இதன்பின்பு, பதவி உயர்வு மூலம் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.

நீதிபதி எஸ்.மணிக்குமார் 3 ஆண்டுகள் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருப்பார் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *