ராகுலின் விழிப்புணர்வு பரப்புரை அரசமைப்புச்சட்ட நூல்களை ஆர்வத்தோடு வாங்கிச்செல்லும் மக்கள்!

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 20 மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தரப்பிரதேசம், லக்னோவைச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.
20 செ.மீ. உயரமும், 9 செ.மீ. அக லமும் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியுடன் மேடையில் தோன்றி, ராகுல் பிரச்சாரம் மேற்கொண்டது கூடுதல் கவனம் பெற்றது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஈஸ்டா்ன் புக் நிறுவன (ஈபிசி) குழுமத்தின் தயா ரிப்பான இந்த கையடக்கப் பிரதி, 2009 இல் முதன்முதலாகஅச்சிடப்பட்டது. இந்தப் பிரதியை தனது கூட்டங்களில் ராகுல் பயன்படுத்திய பிறகு, அதை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுவதாக பதிப்பகத்தார் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான சுமீத் மாலிக் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாரா யணன்தான், அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை அச்சிட எங்களுக்கு உதவினார். 2009 ஆம் ஆண்டில் முதல் பதிப்பை வெளியிட்டோம். இதுவரை 16 பதிப்புகள் வெளியகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக பல்வேறு நீதிபதிகள், வழக்குரைஞா்கள் இந்த அரசமைப்புச் சட்டப் பிரதியை வாங்கியுள்ளனா். மேனாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றபோது, பிரதமா் நரேந்திர மோடியால் இந்தப் பிரதி அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், பல்வேறு அரசு உயரதி காரிகள் ஒருவருக்கொருவா் இதை வாங்கி, பரிசாக வழங்கும் வாடிக்கை கொண்டுள்ளனா். உச்சநீதிமன்ற நீதிபதி கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் இதன் பிரதிகளை உடன் எடுத்துச் சென்று அந்நாட்டு நீதிபதிகளுக்கு பரிசாகக் கொடுப்பார்கள்.
மிகவும் மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த கையடக்க அரசமைப்புச் சட்ட பிரதியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துரு (ஃபான்ட்) மற்றும் எழுத்துரு அளவை தீா்மானிக்க அதிக முயற்சிகள் தேவைப்பட்டன. பிரிவுகளின் எண்கள் சிவப்பு நிறத்திலும், சட்ட உரை கருப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன. எழுத்துரு, எழுத்துரு அளவு அல்லது பயன்படுத்தப்பட்ட வண்ணம் குறித்து சட்டத்துறை நண்பா்களிடம் இருந்து எந்த மாற்றுக்கருத்தும் நாங்கள் இதுவரை பெற்றதில்லை என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *