புதுடில்லி, ஜூன் 20- ‘நெட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தோ்வு எப்போது ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் காங் கிரஸ் வெளியிட்ட பதிவில், ‘நெட் தோ்வு நடத்தப்பட்ட மறுநாள், அந்தத் தோ்வு ரத்து செய்யப் பட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை யில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. முதலில் நீட் தோ்வு வினாத்தாள் கசியவிடப்பட்டது.
தற்போது நெட் தோ்வு வினாத்தாள் கசியவிடப்பட்டுள்ளது. மோடி அரசு வினாத்தாளை கசியவிடும் அரசாக மாறியுள்ளது’ என்று விமா்சித் துள்ளது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நெட் தோ்வு ரத்து செய்யப் பட்டது லட்சக்கணக்கான மாணவா்களின் உணா்வுக்கு கிடைத்த வெற்றியாகும். அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தோ்வு எப்போது ரத்து செய்யப்படும்? நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததற்கும், ஒன்றிய அரசின் நோ்மையின்மைக்கும் பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்’ என்றார். ஒன்றிய பாஜக அரசின் ஊழலும், அசட்டையான செயல்பாடும் இளைஞா்களுக்கு தீங்கிழைப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் விமா்சித்துள்ளார்.