புதுடில்லி, ஜூன் 20 ‘நீட்’ தோ்வு முறைகேடுகளுக்காக ஒன்றிய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி மக்களவை உறுப்பினர் சந்தீப் பதக் வலியு றுத்தினார்
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு நேற்று (19.6.2024) அளித்த பேட்டி:
கல்வியில் ஊழல் என்பது நாட்டுக்கு துரோகம் செய்வதை விட குறைந்ததல்ல. கடந்த சில நாள்களாக நீட் தோ்வில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீட் தோ்வு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து மாணவா் சோ்க்கைகளும் நீட் மூலம்தான் நடக்கின்றன. சுமாா் 1 லட்சம் இடங்களுக்கு 24 லட்சம் மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதுகிறார்கள். மாணவா்கள் இந்தத் தோ்வுக ளுக்கு முன்கூட்டியே தயா ராகின்றனா்.
அவா்கள் மட்டு மின்றி, அவா்களின் குடும்பத் தினரும்கூட முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். கல்வி யில் ஊழல் என்பது தேசத் துரோகத்துக்குச் சற்றும் குறையாது.
ஆம் ஆத்மி கட்சி இதை அரசியல் பிரச்சினை ஆக்க விரும்பவில்லை. ஆனால் பிரதமா் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தனது பதிலை அளிக்க வேண்டும். நாட்டில் இதுபோன்ற தோ்வுகளில் வினாத் தாள்களை கசியவிடுவதை பாஜக நிறுவன மயமாக்கியுள்ளது. இதன் மொத்தப் பிரச்சினையின் தோற்றத்திற்கும் குஜராத்தான் முன்னுதாரணம். ஏனெனில், அங்கு 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு தோ்வு கூட வினா தாள்கள் கசியாமல் நடைபெற்றதில்லை.
பிரதமா் இந்தப் பிரச்சி னைக்கு தீா்வு காண வேண்டும். அவா் ஒன்றிய கல்வி அமைச் சரை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். அல்லது அந்த அமைச்சா் தனது பதவிலிருந்து விலக வேண்டும் என்று பதக் கூறினார்.