எழும்பூர் ரயில் நிலையம் முழு வகையில் சீரமைப்பு – நுழைவாயில் பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்றம்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 19- எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலை பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழமையான ரயில் நிலையம்

தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. 114 ஆண் டுகள் பழமையான, ஒரு அழகான கட்டமைப்புகளைக் கொண்ட நிலை யமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகிறது. அந்த வகையில், இங்கு தினசரி 96 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வந்து செல் கின்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கையாளும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. எனவே, அடுத்த 50 ஆண்டுகளை கணக்கில் கொண்டு ரயில்கள் இயக்கம், பயணிகளின் வருகை, தொழில்நுட்பம், இட வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் ரூ.734 கோடியே 91லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. அய்தராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு பணிக்காக முதற் கட்டமாக எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. பின்னர், மரங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணிக்கான அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. மண்தர பரிசோதனை செய்யப்பட்டு பார்சல் அலுவலகம், நடை மேம்பா லங்கள், காத்திருப்பு அறைகள் உள்ளிட்டவைகள் அமையவுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரயில் நிலைய கட்டடம் அமைய உள்ளது.

இந்த நிலையில், மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கட்டுமானப் பணியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, காந்தி – இர்வின் சாலை பக்கத்தில், பன் னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இங்கு, அடித்தளம் அமைக்கும் பணி கள் முடிவடைந்துள்ளது.
பெரியார் ஈ.வெ.ரா. சாலை பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க, கம்பி கட்டும் பணி முடிவடைந்து அடித்தளம் அமைக்கும் பணி 40 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இங்கு பார்சல் அலுவலகம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

விமான நிலையம் போன்று…

வயதானவர்கள், மாற்றுத் திற னாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட பயணிகளும் பயன்படுத் தும் வகையில் கழிப்பறைகள், குடிநீர் வசதி, காத்திருப்பு அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, விமான நிலையங்களில் இருப்பது போன்று பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவற்றிற்காக தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு பயணிகள் உள்ளே வரவும், வெளியே செல்லும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.

குளிர்சாதன வசதியுடன்

பயணிகள் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவை நிறுத் தும் வகையில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளு டன் பன்னாட்டுத் தரத்தில் அமைக் கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

நுழைவு வாயில் மாற்றம் திட்டம்

எழும்பூர் ரயில் நிலைய மறுசீர மைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பெருகிவரும் வாகன போக்குவரத்து, பயணிகளின் தேவை, எதிர்கால திட்டமிடல், நவீன வசதிகள் ஆகியவற்றை கருத் தில் கொண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அனைத்து தரப்பட்ட மக்களும் எளிதில் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெறுகிறது.

அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத் தப்படும். பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் நுழைவு வாயிலை உள்நுழையும் வாயிலாக மாற்ற திட்டம் ஆலோசனையில் உள் ளது. 2026ஆம் ஆண்டுக்குள் பணி களை முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *