இலங்கை கடற்படையின் கைது வேட்டை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது

1 Min Read

கொழும்பு ஜூன்19- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 241 விசைப்படகுகளில் மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்கள், ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *