இலங்கை கடற்படையின் கைது வேட்டை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது

Viduthalai
1 Min Read

கொழும்பு ஜூன்19- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 241 விசைப்படகுகளில் மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்கள், ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *