நாடு முழுவதும் ரயில் விபத்துக்கள் – யார் பொறுப்பு? லாலு பிரசாத் கேள்வி

0 Min Read

பாட்னா, ஜூன்18- மேற்குவங்காளத்தின் ஜல்பாய்குரியில் பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வா கமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அந்த வகையில் பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மேனாள் ரயில்வே அமைச்சருமாகிய லாலு பிரசாத்யாதவ் இந்த விபத்து தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “நாடு முழுவதும் நிகழும் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *