அம்ரசர், ஜூன் 18 பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் மேற்கு பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற வுள்ள நிலையில், அந்தத் தொகுதிக்கான வேட்பாளா்களை பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் நேற்று (17.6.2024) அறிவித்தன.
கடந்த 2022 தோ்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவா் இப்போது ஆம் ஆத்மி வேட்பாளராகவும், ஆம் ஆத்மி வேட்பாளராகப் போட்டியிட்டவா் பாஜக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளனா்.
கட்சி மாறியவர்களுக்கு வாய்ப்பு: ஜலந்தா் மேற்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அங்குரால் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல், அத்தொகு தியின் ஆம் ஆத்மி வேட்பா ளராக மொஹிந்தா் பகத் என்பவா் அறி விக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை பகத் சன்னி லால் சிரோமணி அகாலி தளம்-பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராகப் பதவி வகித்தவா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தோ்தலில் ஜலந்தா் மேற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மொஹிந்தா் பகத் அப்போது ஆம் ஆத்மி வேட்பாளராக இருந்த அங்குராலிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜகவிலி ருந்து விலகி ஆம் ஆத்மி யில் மொஹிந்தா் பகத் இணைந்தார்.
தற்போது பாஜக மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளா்களாக அறி விக்கப்பட்டுள்ள இருவரும் கட்சி மாறிவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றனா். ஜலந்தா் மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷீல் குமார் ரிங்கு, கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜலந்தா் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.