போபால், ஜூன் 18 மத்தியப் பிரதேசத்தில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாண்ட்லாவில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாண்ட்லா காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் அவர்களின் வீட்டில் மாட்டிறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளின் கொல்லைப்புறத்தில் 150 மாடுகள் கட்டப்பட்டிருந்தது.
காவல்துறையினர் வீட்டை முழுவதுமாக சோதனை செய்த னர்.
அதில் 11 பேரின் வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட இறைச்சி மாட்டிறைச்சி என்பதை உள்ளூர் அரசு கால் நடை மருத்துவர் உறுதி செய்தார்.
அதனைத்தொடர்ந்து மாட்டி றைச்சி வைத்திருந்த 11 வீடுகளும் அரசு நிலத்தில் இருப்பதாக கூறி, இடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை பிடிக்கும் பணி மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.
எவ்வளவு கொடூரமான மனநிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி ஆகும். பக்ரீத் கொண்டாடுவதற்காக இசுலாமியர்கள் குர்பானி கொடுக்க ஆடு மற்றும் மாடு வெட்டுவதற்கு என்று அரசால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகளை வாங்கி கட்டி வைத்திருக்கின்ற்னர்.
காளைகள் மற்றும் எரு மைகள் வெட்டுவதற்கு தடை யில்லாத சூழலில் ஹிந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாட்டிறைச்சி வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக ஒட்டுமொத்த இஸ்லாமிய குடியிருப்பையே இடித்து அவர்களை வீடிழந்தவர்களாக ஆக்கி விட்ட மத்தியப்பிரதேச பாஜக நிர்வாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது
முதலில் குற்றவாளி என்று கூறிக்கொண்டு குற்றவாளியின் வீட்டை இடித்துக்கொண்டு இருந்த பாஜக அரசு தற்போது ஒட்டுமொத்த குடியிருப்பையே இடித்து தள்ளுவது மிகவும் கொடூரமானதாகும்.