மின்­னணு வாக்­கு இயந்­தி­ரங்­களை ஹேக் செய்யலாம் எலான் மஸ்க் கருத்தை வரவேற்று ராகுல் பதிவு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 17- மின்­னணு வாக்­கு இயந்­தி­ரங்­கள் ஒரு “கருப்பு பெட்டி” என்­றும், இந்­திய தேர்­தல் நடை­மு­றை­கள் மீது பெரும் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் காங்­கி­ரஸ் முன்­ன­ணித் தலை­வர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.
அண்­மை­யில் நடந்துமுடிந்த மும்பை வட­மேற்கு தொகுதி மக்­க­ள­வைத் தேர்­த­லில்ஏக்­நாத் ஷிண்டே பிரிவுசிவ­சேனா வேட்­பா­ளர் ரவீந்­திர வைகர் 48வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார்.
இத்­தேர்­த­லின் போது, அத்­தொ­கு­தி­யில் உள்ள வாக்­குச்­­சாவ­டி­யில் இருந்த மின்­னணு வாக்­குப்­பதிவு இயந்­தி­ரத்­து­டன் இணைக்­கப்­பட்ட தொலை­பே­சியை ரவீந்­திர வைக­ரின் உற­வி­னர் ஒரு­வர் வைத்­திருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவ்­வி­வ­கா­ரம் குறித்து காவல்­து­றை­ யி­னர்விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இது குறித்து செய்­தியை தனது எக்ஸ்வலைத்­த­ளத்­தில் பகிர்ந்­துள்ள ராகுல் காந்தி,
இந்­தி­யா­வில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் ஒரு “கருப்பு பெட்டி” என்­றும் அவற்றை யாரும் ஆராய அனு­ம­திக்­கப்­படு­வ­தில்லை என்­றும், நமது தேர்­தல் நடை ­மு­றை­யில் வெளிப்­படைத்­தன்மை குறித்துகடு­மை­யான சந்­தே­கங்­கள் எழுப்­பப்­ப­டு­வ­ தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.
அரசு அமைப்­புக்­கள் பொறுப்­பற்­ற­வை­க­ளாக மாறும் போது, ஜன­நா­ய­கம் ஒரு ஏமாற்று நாட­க­மாக மாறி, மோச­டிக்கு ஆளா­வ­தா­க­வும் ராகுல் காந்தி பதி­விட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், ஹேக் செய்­யப்­ப­டும் ஆபத்து மிக அதி­க­மாக இருப்­ப­தால் தேர்­தல்­க­ளில் மின்­னணு வாக்­குப்­­பதிவு இயந்­தி­ரங்­களை அகற்ற வேண் ­டும் என்று டெஸ்லா நிறு­வன உரி­மை­யா­ளர் எலான் மஸ்க் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.
அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் இவ்­வாண்டு நவம்­பர் மாதம் நடை­பெ­று­கி­றது. தற்­போது அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை தேர்வு செய்­வ­தற்­காக பிரை­மரி எனப்­ப­டும் உள்­கட்சி தேர்­தல்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இத்­தேர்­தல்­க­ளில் மின்­னணு வாக்­குப்­­பதிவு இயந்­தி­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இத்­தேர்­த­லில் சுயேட்சை வேட்­பா­ள­ராக போட்­டியி­டும் ராபர்ட் எஃப் கென்­னடி ஜூனி­யர் வெளி­யிட்­டுள்ள சமூக வலை ­த­ளப் பதி­வில், போர்ட்டோ ரிக்­கோ­வில் நடை­பெற்ற பிரை­மரி தேர்­த­லில் மின்­னணு வாக்­குப்­பதிவு இயந்­தி­ரங்­கள் தொடர்­பான நூற்­றுக்­க­ணக்­கான முறை­கே­டு­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும், நல்­வாய்ப் ­பாக ஆவ­ணங்­கள் இருந்­த­தால், சிக்­கல் கண்­ட­றி­யப்­பட்டு வாக்­கு எண்­ணிக்கை சரி செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டி­ ருந்­தார்.
ஒரு­வேளை ஆவ­ணங்­கள் இல்­லை­யென்­றால் நீதி­மன்­றம் என்ன தீர்ப்பு வழங்­கும் என­வும் ராபர்ட் எஃப் கென்­னடி ஜூனி­யர் கேள்வி எழுப்பி இருந்­தார்.
ராபர்ட் எஃப் கென்­ன­டி­யின் இந்த பதிவை மறுபதிவு செய்­துள்ள எலான் மஸ்க், “தேர்­த­லில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­களை அகற்ற வேண்­டும்என்­றும், மனி­தர்­கள் அல்­லது ஏஐ மூலம் அவை ஹேக் செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஆபத்து மிக அதி­க­மா­கவே உள்­ளது’’ என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *