பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்

viduthalai
1 Min Read

புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், மேனாள் பேராசிரியா் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரி வித்தனா்.

டில்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் கடந்த 2010, அக். 21-இல் ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய், காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக மேனாள் பேரா சிரியா் ஷேக் சவுகத் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

காஷ்மீரைச் சோ்ந்த சுஷில் பண்டிட் என்பவர் டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய 2010, நவ.27-இல் உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த மனுவை ரத்து செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின்கீழ் விசாரிக்க துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளித் துள்ளார். முன்னதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்களுக்கு எதிராக விசாரணையை நடத்த துணை நிலை ஆளுநா் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *