டிசம்பர் 2இல், 91ஆவது பிறந்தநாள் விழா காணும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதற்காக பெருமளவில் ‘விடுதலை’ நாளிதழ் சந்தாக்களைத் திரட்டும் பணி நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் “விடுதலை சந்தா சேர்ப்புப் பணி” துவங்கியது.
இந்திய தேசிய காங்கிரஸ் நாகை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆர்.என்.அமிர்தராஜ் அவர்கள் பத்து விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார்.
நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் மற்றும் அவரது வாழ்விணையர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா ஆகியோர் ஓராண்டு விடுதலை ஆண்டு சந்தா ரூ 2000 வழங்கினர்.
தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் உடன் இருந்தனர்.