நடப்பு கல்வி ஆண்டு முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

2 Min Read

புதுடில்லி, ஜூன் 13– கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை நேரடி படிப் புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் கல்வியாண்டு முதல் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர்களை சேர்க்க லாம் என்றும், நேரடி படிப் புகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள லாம் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது.
நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி களில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், திறந்தநிலை மற் றும் தொலைதூரக் கற்றல் முறைகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைமுறை அம லில் உள்ளது.
இதனால் கல்லூரிகளி லும் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்க நடத்த வேண்டும் என கோரிக்கைகளை வலுப் பெற்று வந்தது.
இந்த நிலையில், நேரடி படிப்புகளுக்கும் ஆண் டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வதற்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
இது குறித்து யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தனது எக்ஸ் தளத் தில் வெளியிட்ட பதிவில், “நடப்பு கல்வியாண்டு (2024-2025) முதல் ஜூலை – ஆகஸ்ட் மற்றும் ஜனவரி, பிப்ரவரி என ஆண்டுக்கு இருமுறை உயர்கல்வி நிறு வனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்.
இத்திட்டம் தேர்வு முடி வுகள் தாமதம், உடல்நலப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் ஜூலை, ஆகஸ்ட் மாத சேர்க்கையில் சேர முடி யாதவர்களுக்கு பலன் தரும். அதேபோல், தொழில் நிறுவனங்களும் வளாக நேர்காணலை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம்
உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இத்தகைய சேர்க்கை நடைமுறையைத்தான் பின் பற்றுகின்றன.
இதன்மூலம் உலகளாவிய கல்வி தரங்களுடன் இணைந்து போட்டியிட்டு மேம்பட முடியும்.
அதேநேரம் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை என்ற நடைமுறையை உயர் கல்வி நிறுவனங்கள் பின் பற்றுவது கட்டாயமில்லை.
தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய பாடத்திட்டங்களை வழங்குவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *