முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரியார் திடலில் 27 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பு

1 Min Read

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நேற்று (12.06.2024), சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் 27 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி (திரு.வி.க. நகர்), வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் வி.சுதாகர், சொ.வேலு (மயிலை), மண்டலக் குழுத் தலைவர்கள் சிறீராமலு, சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சிறீதர், பரிதி இளம்சுருதி மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *