ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு திருவிழா ஒரு ஏமாற்று வித்தை காங்கிரஸ் குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.30  51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக பிரதமர் மோடி நடத்திய விழா ஒரு நாடகம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

 ஒன்றிய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வான பணியா ளர்கள் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கி னார். 

இது தொடர்பாக காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் ஜெயராம் ரமேஷ் பேசியதாவது; ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக் குறுதியை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பணமதிப்பிழப்பு மூலம் மோடி அரசு அழித்துவிட் டது. சரியாகத் திட்டமிடாத ஜிஎஸ்டி, அவசரகதியில் அமல்படுத்திய முழு முடக்கம் போன்றவற்றாலும் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட் டுள்ளது. 

9 ஆண்டுகளாக இளை ஞர்களின் நம்பிக்கைகளை அழித்த பிரதமர் மோடிக்கு தேர்தல் வரும்போது அதன் சூடு தெரிகிறது. சரிந்துவரும் தன் பிம்பத்தை காப்பாற்ற, வேலைவாய்ப்பு மேளா என்ற பெயரில் மிகப்பெரிய நாட கத்தை பிரதமர் நடத்துகிறார். ஏற்கெனவே உருவாக்கப் பட்டு நிர்வாகக் காரணங் களால் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களுக்கே ஆணைகளை வழங்கினார். ஏற்கெனவே பணிபுரிபவர் களுக்கு பதவி உயர்வு ஆணை களை மோடி பணி நியமன உத்தரவு போல வழங்கி உள்ளார். முதலீடுகள் அதி கரிப்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால்தான் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்பு களை உருவாக்கத் தவறிய தற்கான பொறுப்பை பிரத மர் மோடி ஏற்க மறுக்கிறார். தற்போது வேலைவாய்ப்பு மேளா என்ற நாடகத்தை மோடி நடத்தி வருகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *