தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

1 Min Read

பெரம்பலூர், ஜூன் 11- படிக்கட்டு பயணத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் அமைச்சர் எஸ்.‌எஸ்‌.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

புதிதாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை,பழைய பேருந்து பயண அட்டைஅல்லது சீருடையில் வரும் மாணவ, மாணவிகளை கட்டணம்இன்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் உத்தர விடப்பட்டுஉள்ளது.

அரசுப் பேருந்துகளில், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள், படியில் நின்று பயணிப் பதை தடுக்கும் நோக்கில், புதிய பேருந்துகளில் தானியங்கி கதவுகள்இருப்பதுபோல, பழைய அரசுப் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை யில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் முதற்கட்டமாக ஜிபிஎஸ் கருவி பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *