அமைச்சரவையில் இடம் பெற அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் மறுப்பு!

1 Min Read

புதுடில்லி, ஜூன் 10- பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், அஜித்பவார் – தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி ஒன்று அளிக்க பாரதீய ஜனதா முன்வந்தது. அப்பத வியை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேலுக்கு ஒதுக்க விருப்பம் தெரிவித்தது.
ஆனால், அதை பிரபுல் படேல் ஏற்க மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- நான் ஏற்கெனவே கேபினட் அமைச்சர் பொறுப்பில் இருந்தவன். எனவே, இணை அமைச்சர் பதவி யில் அமர்வது எனக்குப் பதவி இறக்கம்போல் ஆகிவிடும்.இதை பாரதீய ஜனதா தலைமையிடம் தெரிவித்துவிட்டோம். மாற்று நட வடிக்கைகள் எடுக்கப்படும்வரை சில நாள்கள் காத்திருக்குமாறு பாரதீய ஜனதா சொல்லியுள்ளது.-இவ்வாறு அவர் கூறினார். அதே சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதிருப்தியில் உள்ள பிரபுல் படேலை சமாதானப்படுத்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். தேசியவாத உறுப்பினரும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *