பதவியேற்ற மறுநாளே பதவி விலகிய அமைச்சர்!

Viduthalai
0 Min Read

புதுடில்லி, ஜூன் 10 குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றிரவு (9.6.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் ஒன்றிய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்பு கிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *