இப்பொழுதுதான் புத்தி வந்ததோ?

Viduthalai
1 Min Read

இனிமேல் கருத்துக்கணிப்பில் இறங்கமாட்டேன் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

புதுடில்லி. ஜூன் 9– நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப் பட்டது.

இதனிடையே பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்து கொடுப்பவருமான பிர சாந்த் கிஷோர், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர் தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண் ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது.

இதில் பா.ஜ.க. மட் டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு தவறாகியுள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம்.

ஒரு தேர்தல் வியூக நிபு ணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந் தக் கட்சி எத்தனை இடங் களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *