இப்படியும் நடக்குமா?

Viduthalai
1 Min Read

கருஞ்சட்டை

கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் மோடி என்.டி.ஏ. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சியினரின் பட்டியலை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முருமுவைச் சந்திக்கச் சென்றார். அவரை வாழ்த்திய குடியரசுத் தலைவர் நெய் சர்க்கரையை ஊட்டிவிட்டார்.

குடும்பத்தில் முக்கிய நபர் ஒருவர் வெற்றி பெற்றாலோ அல்லது ஏதாவது ஒன்றில் சாதித்தாலோ அல்லது நல்ல செயல் ஒன்றைச் செய்யப்போகிறேன் என்று கூறினாலோ நெய், சர்க்கரையை கொடுக்கும் வழக்கம் வட இந்தியாவில் உண்டு.
(மூ மே கீ சக்கர்) உனது வாயில் நெய்யும் சர்க்கரையும் என்று பேச்சுக்குச் சொல்வார்கள். இதுவரை யாரும் நெய்யும் சர்க்கரையும் ஊட்டுவதை வரலாறு பார்த்தில்லை. வேண்டுமென்றால் இனிப்பு ஊட்டுவார்கள் ஆனால் முதல் முறையாக பேச்சு வழக்கில் சொல்வதை அப்படியே ஒரு குடியரசுத்தலைவர் செய்து காட்டியது வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்பதுதான் நமது கவலையுடன் கூடிய உணர்வு.

உண்மையாக இருக்குமானால், இதைவிட ஒரு குடியரசுத் தலைவரின் மதிப்பைக் குலைப்பது வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
மோடி தலைமையிலான அரசு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரும், கணவரை இழந்தவருமான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை அவமதித்தது போதாதா?
இதுதான் ஹிந்துத்துவாவா?

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *