ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனம், பழங்குடிப் பிரிவினருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை ஒதுக்க முடிவு.

* அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றால் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும் என்ற பயத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் பாஜக தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிக வாய்ப்பு என நிதிஷ் குமார் பேட்டி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தந்தை பெரியார், கனிமொழி எம்.பி. ஆகியோர் மீது அவதூறு பரப்பிய வழக்கினை தள்ளுபடி செய்திட எச்.ராஜா அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

* மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசிக்கு தனி பத்தி அமைத்திடுக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேந்திர பாகல் பிரதமருக்கு கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘அதானி மெகா ஊழலின்’ முழு அளவை ஜேபிசி விசாரணையால் மட்டுமே வெளி கொண்டு வர முடியும் என்றும், செபியின் நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் கண்டனம்.

* தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தி ஹிந்து:

* மதிய உணவு திட்டம் மூலம் தமிழ்நாடு வரலாறு படைத்தது. தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்திற்கு குறைந்தது 100 ஆண்டுகள் வரலாறு உண்டு என கட்டுரையாளர் ராமகிருஷ்ணன் புகழாரம்.

* தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தின் காரணமாக மோடி அரசு கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் சாடல்.

தி டெலிகிராப்:

* குஜராத் அரசு உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *