மீண்டும் அதே பாதை! முரணை வளர்த்து ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க!

2 Min Read

புவனேசுவர், ஜூன் 7- ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் உடன் இருப்பவர் வி. கே. பாண்டியன். இவர் தமிழர் என்றும், ஒடிசாவை ஆட்சி செய்வதற்கு தமிழருக்கு எங்கிருந்து உரிமை வந்தது என்றுமானதுதான் பா.ஜ.க உருவாக்கிய அந்த முரண். இந்த முரண் தான் ஒடிசாவில் நவீன் பட்நாயக் வீழ்ச்சிக்கு ஓரளவு காரணமாகவும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மாநில மாக சென்று, பிரிவி னைகளையும், அதனால் உண்டாகும் முரண் களையும் வளர்த்து, ஆட்சியை கவிழ்க்கும் வேலையை செய்து வரும் பா.ஜ.க. அக்கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு கட்சி யாகும்.

கடந்த காலங்களில் எவ்வாறு ராஜஸ்தானில் காங்கிரசையும், உத்த ரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி யையும், மணிப்பூரில் காங்கிரசையும் கவிழ்த் ததோ, அதே சூழலை தற்போது ஒடிசாவிலும் அரங்கேற்றியிருக்கிறது.

இதனால், ஒடிசாவில் பா.ஜ.க.வின் பக்கம் மக்கள் ஆதரவு பெரு கினாலும், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மக்களின் மனநிலை, பா.ஜ.க.விற்கு எதிராக மாற தொடங்கியுள்ளது.

காரணம், ராஜஸ்தானில் அசைக்கமுடியாத ஆற்றலாக இருந்த காங்கிரஸ் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து, ஆட்சியை பிடித்த பா.ஜ.க, ஆட்சிக்கட்டிலில் ஏறியது முதல், மக்களை வஞ்சிப்பதையே தான் முக்கிய குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. 100 நாள் தொழிலாளர்களுக்கு வருவாய் தராமல் இழுத்தடிப்பு செய்ததும், அதில் ஒரு பங்கே, அதன் வெளிப்பாடாகவே, ராஜஸ்தானில் போராட் டங்கள் வெடிப்பும், மக் களவையில் பா.ஜ.க.வின் வீழ்ச்சியும் அமைந்தன. அது போலவே, உத்தரப் பிரதேசத்தில் மதத்தின் பெயரால், பிளவுகளை உண்டாக்கி, கடந்த 7 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் பா.ஜ.க கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, தங்களது பெருமளவு ஆதரவை இந்தியா கூட்டணிக்கு பரிசாக அளித்துள்ளனர் மக்கள். அந்த ஆதரவில், ராமன் கோவில் அமைந் துள்ள இடத்தின் மக்க ளும், அமேதி தொகுதி மக்களும், லக்கிம்பூர் கேரி மக்களும் அடங்குவர்.

அவ்வரிசையில், மணிப்பூர் மக்களிடையே நிலவிவந்த ஜனநாயகத் தன்மையை,சுக்கு நூறாக்கி, ஆயிரக்கணக் கான மணிப்பூரி மக்களை முகாம்களில் வாழச் செய்த பா.ஜ.க.விற்கு, 0 மக்களவை இடங்களை காணிக்கையாக அளித்துள்ளனர் மக்கள்.

இச்சூழலில், ராஜஸ் தான், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்கள் கடந்து வந்த பாதையில் புதிதாக சிக்கியிருக்கிற ஒடிசா மீது வருத்தம் தெரிவிக்கும் பதிவுகள் இணையம் முழுக்க, அதிகப்படியாக பகிரப் பட்டு வருகின்றன.

மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின், பிரிவினை பேச்சுகளால், எதிர்மறையான முறையில் வழிநடத்தப்பட்ட ஒடிசா மக்கள், இனி வரும் காலங்களில் எவ்வகையான நெருக் கடிகளை சந்திக்க இருக் கின்றனரோ என்றும் அப்பதிவுகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *