தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்கு விழுக்காடு 46.97

2 Min Read

சென்னை, ஜூன் 7- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 46.97 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா. ஜனதா கூட்டணி 18.28 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட் டியிட்டது. எனவே, இந்த தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது. அதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணிக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.. எஸ்.டி.பி.அய்.. புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. த.மா.கா.. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜனதா கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றன.

இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.-20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் – 10.67 சதவீத வாக்குகள் பெற்றிருக்கின்றன.

வாக்குகளும், சதவீதமும்…
கட்சிகள்                                    வாக்குகள் சதவீதம்
தி.மு.க. கூட்டணி                      2,04,86,693 46.97
அ.தி.மு.க. கூட்டணி                 1,00,55,124 23.05
பா.ஜனதா கூட்டணி                79,73,801 18.28
நாம் தமிழர் கட்சி                      35,31,364 8.10
சுயேச்சைகள்                               11,59,998 2.66
நோட்டா                                            4,67,068 1.07

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *