அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு முருகன்-ஆதிலட்சுமி ஆகியோரின் மகள் விஜயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 30.8.2023 அன்று காலை 9 மணி அளவில் விழுப்புரம் சோலை திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழன்பன் என்கிற கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், பண்ருட்டி நகரத் தலைவர் புலிக்கொடி, தடுப்பணை தட்சிணாமூர்த்தி, குறத்தி, கழகத் தலைவர் ரட்சகன், விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான், அழக பெருமாள்குப்பம் பாண்டியன், ஏரி பாளையம் ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று பாராட்டுரை நல்கினர் முடிவில் தோழர் ராஜேந்திரன் நன்றி கூறினார்
அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books