ராகுலின் தங்கையாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்: பிரியங்கா புகழாரம்

1 Min Read

புதுடில்லி, ஜூன் 6- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவரும், தன் அண்ணனுமான ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நீ (ராகுல்காந்தி) எழுந்து நிற்கிறாய். அவர்கள் என்ன சொன்னாலும், உனக்கு என்ன செய்தாலும் நீ பின்வாங்கியது இல்லை. உனது உறுதிப்பாட்டை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும், உனது நம்பிக்கையை நீ நிறுத்தியது இல்லை. அவர்கள் எவ்வளவு பொய் பிரச்சாரம் செய்தபோதிலும், உண்மைக்கான போராட்டத்தை நீ நிறுத்தியது இல்லை.

அவர்கள் உனக்கு தினந்தோறும் கோபத்தையும், வெறுப்பையும் பரிசாக அளிக்கிறார்கள். இருப்பினும் கோபமும், வெறுப்புணர்வும் உன்னை மிஞ்ச நீ அனுமதித்தது இல்லை. இதயத்தில் அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றை கொண்டு நீ போராடி வருகிறாய். நீ அனைவரையும்விட துணிச்சலானவர் என்று எங்களுக்கு தெரியும். சகோதரா, ராகுல்காந்தி… உனது தங்கையாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *