போதைமயமாகும் குஜராத்

1 Min Read

ஆமதாபாத், ஜூன் 6- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சில பொட்டலங்கள் கிடந்தன. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடற்கரைக்கு சென்று சோதனையிட்டபோது கேட்பாரற்று கிடந்த அந்த பொட்டலங்களில் கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடற்கரையில் கிடந்த 13 போதைப் பொருள் பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா ஒரு கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.130 கோடி என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *