சாப்பாட்டிலும் தமிழர்களை இழிவுபடுத்தும் பிஜேபி

2 Min Read

புவனேசுவர், ஜூன் 3 ஒன்றிய பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது.

ஒரு பக்கம் தமிழர்கள் குறித்து அவதூறாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் மோடி பேசி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்தால் புகழ்ந்து தள்ளி வருகிறார்.
இது தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், ஒடிசாவில் பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும் தமிழருமான வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கி, தமிழர்களை திருடர்கள் என்ற தொனியில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் கூட, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாயை திறக்கவே இல்லை. மோடியின் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், அமித்ஷாவும் தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். எனினும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வழக்கம்போல் அதனை கண்டுகொள்ளமலே இருந்தனர்.

இந்த சூழலில் தற்போது ஒடிசா பாஜக ட்விட்டர் பக்கத்தில், தமிழர்களையும், அவர்களது உணவு முறை பழக்கங்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காட்சிப் பதவில் தென்னிந்திய கலாசார உடையான வேட்டி – சட்டை அணிந்த நபர் ஒருவர் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கே அவருக்கு பழைய சோறு கொடுக்கப்படுகிறது.

அதனை அவர் பாத்திரத்தில் சாப்பிடாமல் ஓட்டல் ஊழியரிடம் சண்டையிட்டு, இலையில் போட்டு சாப்பிடுகிறார். அப்போது அந்த சோறு மற்றும் தண்ணீர் வடிகிறது. மேலும் ஓட்டல் ஊழியர் சப்பாத்தி எடுத்து வரும்போது அதை தோசை என்று அந்த நபர் கேட்பது போன்றவையும் காட்சிப் பதிவில் இடம் பெற்றிருந்தது.
மொத்தமாக வி.கே.பாண்டியனை தாக்கி காட்சிப் பதிவை வெளியிடும் நோக்கில் ஒட்டுமொத்த தென்னிந்திய உணவு முறை கலாச்சாரத்தையே பாஜக அவமானப்படுத்தியுள்ளது.

பாஜகவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த நிகழ்வுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வாயை மூடியே இருக்கின்றனர். இந்த நிகழ்வால் தமிழ்நாடு மக்கள் மேலும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *