முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர்மாலை வைத்து மரியாதை

1 Min Read

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கலைஞருடைய உருவப்படத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவெற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் மோகன், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வெற்றிச்செல்வி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மு.சண்முகப்பிரியன், அரும்பாக்கம் தாமோதரன், தனலட்சுமி தங்கமணி, அன்புமணி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் (சென்னை, 3.6.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *