மக்களுடன் ஆடியோ தொடர் மூலம் பேச உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

அரசு, இந்தியா, தமிழ்நாடு

கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை காட்சிப் பதிவு வடிவில் பகிர்ந்து வந்தார். தற்போது ஆடியோ தொடர் (Podcast)  மூலம் மக்களுடன் பேசப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அவர் இந்த ஒலிப்பதிவுத் தொடருக்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for india) என்று தலைப்பு வைத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில்.

“நாம் இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். வரும்  2024-இல் முடியப் போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறார்கள்; நாம் எதிர்காலத்தில் கட்ட மைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஒலிப்பதிவுத் தொடர்மூலம் பேசப் போகிறேன். தொடருக்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காகக் காத்திருங்கள்..!” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *