கடவுளுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை சிவன் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

புதுடில்லி,மே 31- யமுனை ஆற்றுநீர் பாயக் கூடிய சமவெளி பகுதிகள், ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டால், கடவுள் சிவன் மகிழ்ச்சியடைவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

டில்லியின் யமுனை ஆற்றுப்படு கையையொட்டி கீதா காலனி பகுதியில் தாஜ் என்கிளேவ் என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று எழுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என கூறி அதனை இடிக்க அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை ரத்து செய்ய கோரி, பிரசீன் சிவ மந்திர் அவாம் அகடா சமிதி என்ற அமைப்பு சார்பில் டில்லி ஊயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரணைக்கு எடுத்து கொண்டார். இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, கடவுள் சிவனுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை. அதனைவிட, மக்களாகிய நாம்தான் அவரிடம் சென்று பாதுகாப்பையும், ஆசிகளையும் கோரி வருகிறோம் என கூறினார்.

யமுனை ஆற்றுநீர் பாய கூடிய சமவெளி பகுதிகள், அனைத்துவித ஆக்கி ரமிப்புகள் மற்றும் அங்கீகாரமில்லாத கட்டுமானத்தில் இருந்து விடு விக்கப்பட்டால், கடவுள் சிவன் மகிழ்ச்சியடைவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், இந்த கோவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பதற்கான எந்த சான்று பதிவும் இல்லை. கோவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் இல்லை. அந்த வகையில், இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

எனினும், மனு தாக்கல் செய்தவர்கள், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் மதம் சார்ந்த பிற பொருட்களை நீக்கி வேறு ஏதேனும் கோவிலில் வைப்பதற்கு 15 நாட்கள் காலஅவகாசமும் அளித்துள்ளார்.

அப்படி செய்ய தவறினால், இந்த பணியை டில்லி வளர்ச்சி கழகம் மேற்கொள்ளும். இறுதியாக, அங்கீகாரமற்ற கட்டுமான பகுதியை இடிக்கும் பணியை டில்லி வளர்ச்சி கழகம் செய்யும். இதனை மனு செய்தவரோ அல்லது அதன் உறுப்பினர்களோ தடை செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் நிர்வாகம் இந்த பணிக்கு, முழு அளவிலான உதவியை வழங்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *