நோய் பரப்பும் கொசு ஒழிப்புப் பணி 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, மே 31 தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா உள்பட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 27,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பருவ மழையை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த அறிவுறுத்தல்களும் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கேரளத்தையொட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் இருக்கும் என்பதாலும், வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழைப் பொழிவு இருக்கக் கூடும் என்பதாலும் மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.குறிப்பாக, கொசுப் புழு ஒழிப்பு பணிகளில் சுமாா் 27,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிா்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள் ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *