விவேகானந்தர் பாறையில் பிரதமரின் தியானம் அதிகார அத்துமீறலை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு காங்கிரஸ் மனு

1 Min Read

சென்னை, மே 31 பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் போது, அதிகார அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக காங்கிரஸ் வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.பி.சூரிய பிரகாசம், வி.இஸட்.விக்டர், என்.அருள் பெத்தையா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவா ளரிடம் நேற்று (30.5.2024) மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி, மே 30 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்கக் கூடாது. வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து காங்கிரஸ் வழக்குரைஞர் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்தபோது பதிவுத்துறை அதை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *