படிப்பவர்களுக்கு விடுதலை வழங்கிய மதுரை புரவலர்கள்

Viduthalai
1 Min Read

மதுரையைச் சேர்ந்த முத்து மசாலா நிறுவனத்தின் உரிமையாளரும் கழகத் தோழருமான முத்து மற்றும் பெரியார் பற்றாளரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான லோகராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் சர்க்கரைச் செட்டியார் நினைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படிப்பகம் அதுபோல ஜெய்ஹிந்துபுரத்தில்‌ இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படிப்பகத்திற்கும் இரண்டு விடுதலை ஆண்டு சந்தாவாக ரூ.4000த்தை வழங்கினர். முத்துமசாலா உரிமையாளர் தோழர் முத்து கூறும் போது நான் நாள்தோறும் மாலையில் இணைய வழியாக விடுதலையை படித்து விடுவேன். இருந்தாலும் நான் வழங்கும் நன்கொடை மூலமாக படிப்பகத்தில் மக்கள் படிக்க பயன்படட்டும் என்று கூறினார். அதுபோல் லோகராஜனும் படிப்பகம் சென்றால் எண்ணற்ற பேருக்கு பயன்படும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *