பதவிக்கேற்ற பேச்சு தேவை மோடி, அமித்ஷாவுக்கு – சரத்பவார் கண்டனம்!

1 Min Read

மும்பை, மே 28 நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி இமாச்சலபிரதேசத்தில் அண்மை யில் பிரச்சாரம் செய்த மோடி, “காங் கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. காங்கிரஸ் அரசு உதவிக்காக உலகம் முழுவதும் மன்றாடியது. ஆனால் இப்போது இந்தியா தன் சொந்த வலிமையில் போராடுகிறது” என்று பேசியிருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத்பவார் 25.5.2024 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “காங்கிரஸ் ஆட்சி காலம் குறித்த மோடியின் பேச்சுகள் வேதனை தருகிறது. பிரதமர் பதவி என்பது ஒரு நிறுவனத்தின் தலைவர் பதவி போன்றது. முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.
310 இடங்களுக்கு மேல் பா.ஜ. வெற்றி என அமித் ஷா சொல்கிறார். தேர்தல் முடிவதற்கு முன் இது போன்ற கருத்துகளை வெளியிடக் கூடாது. முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு அடிப்படை யுடன் பேச வேண்டும். இதுபோன்ற அறிக்கைகளை ஏற்க முடியாது” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *