தெலங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு

viduthalai
1 Min Read

அய்தராபாத், மே 28 தெலங் கானா அரசு பொது சுகா தாரத்தை கருத்தில் கொண்டு உணவு பாது காப்பு ஆணையர் குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடை உத்தரவை மே 24 அன்று அறிவித்தார். உணவு பாது காப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை தடை மற்றும் கட்டுப்பாடு) ஒழுங்கு முறை 2011 இன் ஒழுங்கு முறை 2.3.4 உடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 இன் பிரிவு 30 இன் உட்பிரிவு (2) இன் உட் பிரிவு (ணீ) இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல மைச்சர் ரேவண்ணாவின் அறிவுரைப்படி மாநிலம் முழுவதும் உள்ள பல பான் கடைகளில் குட்கா விற்பனை செய்வதில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குட்கா மற்றும் பான் மசாலா வியாபாரிகள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பல பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

மலக்பேட்டை ரெனோவா பீபி புற்று நோய் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக் டர் கே. சையத் அக்ரம்

“குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடை இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முக் கியமான படியாகும். இந்த தயாரிப்புகளில் புகை யிலை மற்றும் வெற்றிலை போன்ற தீங்கு விளை விக்கும் பொருட்கள் உள் ளன, இது வாய் புற்று நோயின் அபாயத்தை எட்டு மடங்கு அதிகரிக் கும். இந்த புற்றுநோய்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், அரசாங்கம் குடிமக்களைப் பாதுகாத்து புற்று நோயைத் தடுக்கிறது. இந்த நடவடிக்கையானது வாய்வழி புற்றுநோயை கணிசமாகக் குறைக்கும், உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் சுகாதாரச் சுமையை எளிதாக்கும்” என்று. தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *