ஏட்டுத் திக்குகளிலிருந்து…

2 Min Read

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.5.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
– மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டு போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
– மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவிப்பு
– இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து வரும் சீனா குறித்து பிரதமர் மோடி மவுனம் காக்கிறார், மல்லி கார்ஜூனா கார்கே கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
– இந்திய அணி ஏற்கெனவே 272 இடங்களின் பாதியை கடந்துவிட்டது: அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாஜக பிரசாரம் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேச்சு.
– டில்லி வாக்காளர்களில் மேல்தட்டு வாக்காளர்கள் பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் இந்தியாவின் பெருமை குறித்து பேசுகிறார்கள். அடித்தட்டு மக்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து கவலை.

டைம்ஸ் ஆப் இந்தியா:
– இந்த தேர்தலில் பிஜேபிக்கு இறுதி விடை கொடுக்கப்படும். ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப் படும் போது, அது பலருக்கு சுதந்திர நாளாக இருக்கும். ஜூன் 5 இந்தியா கூட்டணி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பிடிஏ ஆட்சியில் அமரும். இது ஒரு வரலாற்று நாளாகவும் அனைவருக்கும் கொண்டாட்ட நாளாகவும் இருக்கும் என அகிலேஷ் பேட்டி.
– வாக்கு வங்கி அரசியலுக்காக அழகிகள் போல் ஆட்டம்: இந்தியா கூட்டணி குறித்து மோடி சர்ச்சை பேச்சு
– நாட்டின் வரலாற்றில் எந்த பிரதமரும் பயன்படுத்தாத இது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக் கிறார் என பிரியங்கா சாடல்.
– பிரதமரின் உரைகளின் கண்ணியம் மற்றும் பாஜகவின் இருக்கைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைகின்றன என ராகுல் பதிவு.
– வெயிலில் பிரச்சாரம் செய்வது மனதை அதிகம் பாதித்து இருக்கலாம். இதற்காக மோடி ஏதாவது மருந்து எடுத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் ஊடகம், விளம்பரத் துறை தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் தளத்தில் பதிவு.

தி டெலிகிராப்:
– உத்தரப்பிரதேசம்: காஜியாபாத்தில் பெண்கள் குளிய லறையில் கேமராவை வைத்த கோயில் அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *