6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு

1 Min Read

புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மேற்குவங் கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அரியானா, ஆகிய மாநிலங்களிலும், டில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 58 தொகுதிகளில் பெருமளவு அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது.
காலை 7 மணி முதல் பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, டில்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜன நாயக கடமை ஆற்றினார். டில்லி யில் உள்ள வாக்குச்சாவடி மய்யத் திற்கு தனது மனைவி சுதேஷ் தன் கருடன் சென்ற ஜெகதீப் தன்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டில்லி யில் உள்ள வாக்குச்சாவடி மய்யத் தில் வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை யொட்டி புவனேஷ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒடிசா முதல மைச்சர் நவீன் பட்நாயக் தனது வாக்கினை பதிவு செய்தார். இதே போல், பிஜு ஜனதா தளம் கட்சி யின் நிர்வாகி வி.கே.பாண்டியன், புவனேஷ்வரில் உள்ள வாக்குச் சாவடி மய்யத்தில் வாக்களித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் மேனாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாக்களித்தார். அவரது வருகையால் வாக்குச்சாவடி மய் யமே திக்குமுக்காடியது.
இந்திய கிரிக்கெட் அணியின் மேனாள் கேப்டனான கபில் தேவ் டில்லியில் வாக்களித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர், ஜனநாயக நாடாக இந்தியா இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *