கடவுள் காப்பாற்றவில்லையே!

Viduthalai
1 Min Read

உத்தரகாண்டில் பக்தர்கள் பயணித்த
பேருந்தின் மீது லாரி மோதி 11 பேர் பலி

இந்தியா

டேராடூன், மே 26 உத்தர காண்டில் உள்ள பூர்ணகிரி கோயிலுக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது டிரக் மோதியதில் 11 உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து நேற்று (25.5.2024) இரவு ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியாக போலஸ்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி நிலை தடுமாறி பேருந்துமீது கவிழ்ந்ததில் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பக்தர்கள் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் உத்தரகாண்டின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடவுளைக் கும்பிட கோவிலுக்குச் செல்லும் வழியில் பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வு, கடவுள் சக்தியின் இலட்சணம்பற்றி பேசு பொருளாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *