ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்:மோடியின் பதில் என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி

1 Min Read

தஞ்சாவூர், செப். 3 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தஞ்சாவூரில் அளித்த பேட்டி: 

ஒன்றிய அரசு அலுவ லகங்களில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள் ளது. 

இதனால் வேலை நாள் குறையும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் பன் னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந் தாலும் வரிகளை அதிக மாக போட்டுக்கொண்டே இருப்பதால் அதன் விலை குறையவில்லை.

உணவுப் பொருட் களின் மீது ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது நியாய மல்ல. கார்ப்பரேட்டுக ளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்குகிறது. 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அர சுத் திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குப் பிரத மர் பதில் கூற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *